Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

Showing posts with label பாபநாசம் சிவன். Show all posts
Showing posts with label பாபநாசம் சிவன். Show all posts

Saturday, December 22, 2007

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 2

சென்ற பகுதியின் தொடர்ச்சி:

சென்ற பகுதியில் பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்து கொண்ட 'ஜங்கார ஸ்ருதி செய்குவாய், சிவ வீணையில்' என்கிற பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த இந்தப்பாடலை இங்கு கேட்கலாம். 'ஜங்கார...' இன்று இழுக்கும் இடத்தில், பூர்விகல்யாணி அருவியில் மேலிருந்து கேழே விழுவதைப் போன்றதொரு உணர்வினைப் பெறலாம்!.
'நீ மாடலு' என்கிற பூர்விகல்யாணி கீர்த்தனையும் இந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது. இது பரதநாட்டியத்தில் ஜவளியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பூர்வி கல்யாணியில் இதர கிருதிகள்/கீர்த்தனைகள்:

* நின்னுவின - சியாமா சாஸ்திரி

Dr.N.ரமணி அவர்களின் புல்லாங்குழலில் இந்த பாடலை இங்கு கேட்கலாம். இந்தப் பாடலில் காஞ்சி ஏகாம்பரநாதர் / காமாட்சி பற்றிய குறிப்பும் உண்டு.

* மொய்யார் தடம் - மாணிக்கவாசகர்

பூர்வி கல்யாணி ராகத்தில் இந்த திருவெம்பாவை பாடலுக்கு பண்ணேற்றி - குறிப்பாக செம்மங்குடி அவர்களும் எம்.எஸ் அம்மா அவர்களும் பாடி இருக்கிறார்கள்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழற்போற்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

இந்த மார்கழி மாதத்திற்கு பொருத்தமான இந்த திருப்பள்ளிஎழுச்சியை எம்.எஸ் அம்மா பாடிட இங்கே கேட்கலாம்.

* பரதெய்வம் உனையன்றி - பாபநாசம் சிவன்

இந்தக் கிருதியின் ஆலாபனையும் பின்னர் அதை வயலினில் இசைத்திடவும் கேட்கலாம். பூர்வி கல்யாணியின் இனிமையை இதில் இனிதே நுகரலாம்:

03 Paratheivam-POO...


இந்தக் கிருதியின் வரிகள் இங்கே:

பல்லவி
பரதெய்வம் உனையன்றி உண்டோ
பலநோய்க்கு மருந்தே என் துயர்தீர்க்கும் காருண்ய (பரதெய்வம்)

அனுபல்லவி
ஹரனே சதாசிவ பரனே வராபய
கரனே உமையாள் மனமகிழ் சுந்தரனே எமையாள் மறைபுகழும் (பரதெய்வம்)

சரணம்
அடிமுடியார் கண்டார் ஆதி-மத்
யாந்த ரஹித சம்போ-நாமமுடன்
வடிவமும் உனக்குண்டோ-மாலயனும்
வணங்கும் சுவயம்போ
சடை முடியணி கைலாச விஹாரா
சங்கரா த்ரிபுர ஹரநிர்விகார (பரதெய்வம்)


தொடர்ந்து, சுதா ரகுநாதன் அவர்கள் இந்தப் பாடலை பாடிடக் கேட்கலாம்:

03 Paratheivam-Sud...


திரை இசையில் பூர்விகல்யாணி:

* சந்திக்க துடித்தேன் பொன்மானே / SPB, ஜானகி / வேதம் புதிது

SandhikkaThudittae...

(இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை என்பது வேறு விஷயம்!)

Friday, October 05, 2007

ஆபோகியில் அகமுருகி

ஆபோகி ராகத்தினைப் பற்றி அரிய ஆர்வமுள்ளவர் விக்கிபீடியாவிற்கு விஜயம் செய்யவும்.

தமிழ் திரையில் ஆபோகி ராகத்தில் வந்த சில திரை இசைப் பாடல்கள் இங்கே:

தங்கரதம் வந்தது வீதியிலே/ Dr பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா / கலைக்கோவில் / MS விஸ்வநாதன்


thangarathamvantha...


காலை நேர பூங்குயில் / S ஜானகி, SPB / அம்மன் கோயில் கிழக்காலே /இளையராஜா



இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே / வாணி ஜெயராம், ஜெயசந்திரன் / வைதேகி காத்திருந்தாள் / இளையராஜா



இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே பார்க்கலாம்.

சமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் 'நி' ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.

திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.

முதலில்:
சபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்
Sabapathikku.mp3


மேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:


கோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்!

தியாகராஜர் : ஆஹா, நீங்கதான் 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!

கோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.

தியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.

கோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே!.

என்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ - தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்?
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?

அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம்
அறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

அதுவும் "ராமா நீ சமானம் எவரு?" என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே!
பாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் 'மனசு நில்ப சக்திலேகபோதே' என்ற பாடலை இயற்றினாராம்!


அடுத்ததாக:

நெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்
03 Nekkuruhi-Main....


இந்த பாபநாசம் சிவனின் ஆபோகி ராகக் கீர்த்தனையில் நெக்குருகிப் பாடினால், முருகனருள் முன்னிற்காதோ!

இந்த கீர்த்தனையில் ஸ்வர சஞ்சாரங்கள் அலாதி திருப்தி அளிப்பவை. குறிப்பாக -


ரீ ரி க ம க ரி ஸா - ரி க மா மா

த ஸ் த த மா - க ம த ஸ்ா

ரி ஸ்ா ம க ரி ...

நீங்களே கேட்டுக் களியுங்கள்:



Nekkuruhi-Swarams....