Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

Showing posts with label காபி. Show all posts
Showing posts with label காபி. Show all posts

Thursday, July 19, 2007

சினிமா காரம் காபி - பாகம் 5

தற்போது இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களிலேயே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர ராஜா். தன் தந்தையின் நிழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டு தனக்கென்று ஒரு தனி பெயரை நிலை நிறுத்திக்கொண்டு வருகிறார்.
அவரின் ஆரம்பகால படங்களான துள்ளுவதோ இளமை,நந்தா,தீனா,மௌனம் பேசியதே போன்ற படங்களிலேயே அவர் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று எனக்கு தோன்றியது. சமீப காலம் வரை அவர் கூட காபி அடிப்பார் என்று எனக்கு தகவல் இல்லாமல் தான் இருந்தது.

இந்த தொடருக்காக சிறிது இணையத்தில் நோண்டி பார்த்த போது தான் இவரும் ஆங்காங்கே சில அட்டை காபிகளை செய்து வருகிறார் என்று தெரிந்து கொண்டேன். அதுவும் அவரின் தந்தையின் இசையமைப்பிலிருந்து அவர் புனைந்த சில இசை அமைப்புகள் பற்றி ஒரு தனி பட்டியலே உண்டு. குறிப்பாக 7G ரெயின்போ காலனியில் வரும் தீம் ம்யூசிக் ஜானி படத்தில் இறுதி காட்சியில் வரும் பிண்ணனி இசையை ஒத்து இருப்பதை பார்க்கலாம். இன்னொரு உதாரணமாக தாஸ் படத்தில் வரும் "வா வா வா,வராங்காட்டி போ போ போ" எனும் பாடல். இந்த பாடல் கேட்கும் போதே இது எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று நினைத்திருந்தேன்.பிறகு தான் தெரிந்தது இது "நீங்கள் கேட்டவை" படத்தில் வரும் அடியே!! மனம் நில்லுனா நிக்காதடி"" பாட்டின் காபி என்று. பாடலின் சில பகுதிகளை உன்னிப்பாக கவனித்தால் எப்படி அவை அச்சு அசலாக ஒத்து போகின்றது என்று பார்க்கலாம்.
ஆனால் நாம் இன்றைக்கு இதை பற்றி பார்க்கப்போகும் உதாரணம் "பாலா" படத்தில் இடம் பெறும் "தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே" எனும் பாடல். இந்த பாடல் இவரின் தந்தை "மஹாதேவ்' எனும் இந்திப்படத்தில் இசையமைத்த "ரிம்ஜிம் ரிம்ஜிம்"(1942 லவ் ஸ்டோரி எனும் படத்தில் வரும் ரிம்ஜிம் பாட்டோடு இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்) எனும் பாடலின் காபி . நீங்களே சற்று கேட்டு பாருங்களேன்.

பாலா - தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே




மஹாதேவ் - ரிம்ஜிம்





ஹ்ம்ம்ம்!!
இப்போ கொஞ்சம் வெளிநாட்டு காபியை பாக்கலாம். "காதல் கொண்டேன்" படம் செல்வராகவன்,தனுஷ்,சோனியா அகர்வால் என்று பல பேருக்கு தமிழ் திரையுலகிற்கு முகவரி அமைத்து கொடுத்த படம். நான் யுவன் சங்கரின் இசைக்கு தீவிர ரசிகனாவதற்கு இந்த படம் ஒரு முக்கிய காரணம். திரையில் இடம் பெற்ற பாடல்கள் தவிர "நட்பினிலே நட்பினிலே" போன்ற படத்தில் வெளிவராத சில பாடல்களும் அற்புதமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் புகழ் பெற்ற இரு பாடல்கள் அப்படியே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை.
படத்தில் வரும் "மனசு ரெண்டும் பார்க்க" எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலை எங்கிருந்து பிடித்திருக்கிறார் யுவன் என்று சற்று பாருங்கள்!! :-)

மனசு ரெண்டும் பார்க்க - காதல் கொண்டேன்



A rose in the wind - Anggun




படத்தில் இன்னொரு பிரபலமான பாட்டு "காதல் காதல் காதலின் நெஞ்சம்" என் தொடங்கும் பாடல். இது எங்கிருந்து எடுத்திருக்கிறார் என்று பார்க்கலாமா??

காதல் காதல் - காதல் கொண்டேன்




Raven - Hedningarna




இது தவிர இந்த படத்தில் வரும் ஒரு அழகான மெலடி "நெஞ்சோடு கலந்திடு" என தொடங்கும் பாடல். இந்த பாடல் Corrs இசைஇக்குழுவின் பாடலான "Runaway" எனும் பாட்டின் தொடக்கத்தின் இன்ஸ்பிரேஷன் என பட்டவர்த்தமாக தெரியும். இது முழுக்க முழுக்க காபி அடிக்கபடவில்லை என்பதால் இதை கூட சற்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த பாடலை பற்றி் நான் என்னுடைய வயலின் பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன்.
நல்ல திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் கூட சந்தர்ப்பவசத்தில் இன்ஸ்பயர் ஆகி அல்லது காபி அடிக்க வேண்டி வந்து விடுகிறது என்பதையே இது காட்டுகிறது. :-)

நன்றி:
http://www.itwofs.com/

Monday, June 18, 2007

சினிமா காரம் காபி - பாகம் 4

தமிழ்த்திரை உலகில் தற்பொழுதிருக்கும் இசை அமைப்பளர்களில் பெரிதும் மதிக்கப்படும் இசை அமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர். அவரின் பல மனதை வருடும் பாடல்களை நானும் கேட்டு மயங்கி இருக்கிறேன்.ஒரு முறை இசை அமைப்பாளர் பற்றிய பேச்சு வரும்போது ரஹமானிற்கு இணையாக வித்யாசாகரும் திறமையானவர் என்று என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார ஒரு நண்பர்்!! அந்த அளவுக்கு தீவிரமான ரசிகர்கள் அவருக்கு உண்டு.
அந்த சண்டை இப்பொழுது இங்கே வேண்டாம்,ஆனால் வித்யாசகர் இசையில் நமக்கு காணக்கிடைக்கும் "இன்ஸ்பிரேஷன்ஸ்" வகையறாக்கள் சிலவற்றை பார்க்கலாமா??

சந்திரமுகி!!
இந்த படத்தை பற்றி என்ன சொல்வது?? தலைவர் படம்!! சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு மலையாளப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படி தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்தினாலும் கூட ் இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை!! :-) இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் "ரா ரா" என துவங்கும் பாடல். ஆனால் இந்த பாடல் கன்னட படத்தில் அமைந்த "ரா ரா" பாடலை போலவே தான் இருக்கும்். படமே காபி எனும்போது இந்த பாட்டின் ஒற்றுமை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் "அத்திந்தொம் திந்தியும் தொந்தன திந்தாதினந்தோம்" எனதுவங்கும் பாடல்!! (இறைவா,சொல்லுறதுக்குல்லாற நாக்கு சுலுக்கெடுத்துகிச்சு!! நல்லா எழுதராய்ங்கையா பாட்ட!! :-P)!!!
நல்ல பாடல், அமைதியான ஓட்டம்,இனிமையாக இசைந்து, இருக்கமான மனதை இளக வைக்கும் அழகான பாடல். ஆனால் இந்த பாடல் அட்டை காபி என்ற விஷயம் எனக்கு வெகு நாட்களாக தெரியாது.
அட!! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா??? நாடான் பாட்டு எனும் கேரள நாட்டுப்புற பாட்டை நீங்களும் கேட்டால்தான் உங்களுக்கும் புரியும். கேரள நண்பர்கள் இதை பற்றி பின்னூட்டத்தில் மேலும் தகவல்களை அளித்தால் நன்றாக இருக்கும்!! :-)


அத்திந்தோம் - சந்திரமுகி





அத்திந்தோம் - நாடான் பாட்டு





அடுத்ததா நாம பாக்க போறது அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த "கர்ணா" என்ற படத்தில் வரும் பாடல். வித்யாசாகரை நான் கவனிக்க ஆரம்பித்த படம் என்றால் அது கர்ணா படம்தான்.அந்த படத்தில் வரும் "மலரே மௌனமா" எனும் பாடல் என்னை அப்படியே உருக வைத்து விடும்.அருமையான ஹிந்துஸ்தானி இசையில் எஸ்.பி.பி மற்றும் ஜானகியின குரல் இழைந்து குழைந்து இதயத்தை தாலாட்டு பாடி தூங்க வைத்து விடும்!! ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போவது வேறு ஒரு பாடல்.
படத்தில் "ஏய் ஷப்பா ஏய் ஷப்பா' என்று ஒரு பாட்டு.மத்திய கிழக்கு நாடுகளின் இசை பாணி பாட்டில் அமைந்த வேகமான பாட்டு.நல்ல ரசிக்கும்படியாக, படத்தில் இயனக்குனரின் தேவையை நிறைவேர்த்தக்கூடிய பாட்டு.இந்த பாட்டு ஒரு ஈயடிச்சான் காபி என்று உங்களுக்கு தெரியுமா?? நீங்களே கேட்டு பாருங்கள்!! :-)

ஹே ஷப்பா - கர்ணா






ஏய் சப்பா





இது வரை முழுப்பாடல் காபியை பார்த்தொமல்லவா இப்பொழுது பாடலின் ஒரு பகுதி மட்டும் முழுவதுமாக காபி அடிக்கப்பட்ட சில தருணங்களை பார்க்கலாம். :-)

தீராத தம்மு வேணும் - பார்த்தீபன் கனவு





லையோலை லயலோ.........







பார்த்தீங்களா?? இதே போல இன்னொரு பிட் இப்போ கேளுங்க!! :-)

என்ன செய்ய - பார்த்தீபன் கனவு





ஃப்யூகோ - ஷைன்








Powered by Podbean.com


ஹ்ம்ம்ம்!!
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை!! :-)

அடுத்த முறை இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்!!
வரட்டா?? :-)

நன்றி :
http://www.itwofs.com/

Sunday, June 03, 2007

சினிமா காரம் காபி - பாகம் 3

இந்த பதிவுல தேவா பத்தி எழுதலாமனுதான் நினைத்தேன்,ஆனால் வலையுலகில் தேவாவிற்கு இருக்கும் அன்பும் ஆதரவையும் பார்த்து அவரை பற்றி பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அதற்கு இணையாக சுவாரஸ்யம் மிகுந்த வேறோரு தமிழ்திரையுலக காபி பற்றி இன்றைக்கு நாம் பார்க்கலாம்.

ஒரு படத்தின் எல்லா பாடலகளையுமே ஈயாடித்தான் காபி அடித்த இசை அமைப்பாளரும்,அப்படி காபி அடிக்கப்பட்ட படம் பற்றியும் தெரியுமா உங்களுக்கு். இந்த மகத்தான பெருமைக்கு உரித்தானவர் இசை அமைப்பாளர் சிற்பி ,நாம் பார்க்கப்போகும் திரைப்படம் "உள்ளத்தை அள்ளித்தா".

உள்ளத்தை அள்ளித்தா திரைவானில் தோன்றிய புத்துணர்வு கூட்டக்கூடிய இளமை படம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி இழையோடிய நகைச்சுவையால் பின்னப்பட்டு , கலகலப்பாக செல்லக்கூடிய லேசான படம். நடிகை ரம்பாவை மர்லின் மன்ரோ ரேஞ்சுக்கு அறிமுகத்தோடு திரையுலகில் தன் பயணத்தை தொடக்கிவைத்த படம். படத்தில் கார்த்திக் மற்றும் கவுண்டமணியின் லூட்டிகளுடன் சேர்த்து படத்தின் இனிமையான இசையும் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். பட்டி தொட்டிகளில் எல்லாம் படத்தின் ஐந்து பாடல்களும் எப்பொழுது பார்த்தாலும் அலறிக்கொண்டு இருந்தது.
ஆனால் இந்த ஐந்து பாடல்களுமே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமா???
தெரிய வேண்டும் என்றால் மேலே படியுங்கள்!! ;-)

1.) படத்தின் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று "அழகிய லைலா" எனப்படும் ரம்பாவின் அறிமுகப்பாட்டு. இதில் தான் மர்லின் மன்ரோவைப்போன்று கிலுகிலுப்பான காட்சியுடன் பாடல் ஆரம்பமாகும். இந்த பாட்டை மக்கள் (ஆண்கள்(!?) ) திரும்ப திரும்ப விரும்பி பார்த்தற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடலை கேட்கும் போதே பாடலில் மத்திய கிழக்கு நாடுகளின் இசைச்சாயல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது!! ஆனா இந்த பாட்டே ஒரு மத்திய கிழக்கு இசை பாடலின் அச்சு அசல் காபி என்று தெரியுமா?? நீங்களே கேட்டு பாருங்கள்!! :-)

உள்ளத்தை அள்ளித்தா - அழகிய லைலா






ஹிஷமப்பாஸ் - அஹ்லமஃபெகி





இதுல என்ன காமெடினா,"யெஸ் பாஸ்" எனும் இந்தி படத்தில் வரும் "சுனியே தோ" எனும் பாட்டும் இதே பாட்டின் காபி தான்!!அந்த படத்தின் இசை அமைப்பாளரின் பெயர் ஜடின் லலித்!! :-)

2.)படத்தில் எல்லோரும் ஒன்று கூடி உண்டு மகிழ்ந்து இருக்கும் வேலையில் கதாநாயகி பாடுவது போல ஒரு பாட்டு வரும்.பாட்டின் மெட்டும்,படமாக்கிய விதமும் பார்பவற்கு ஒரு இதமான மன நிலையை கொடுத்து விடும்.
பின்பு ஒரு முறை எம்.டிவியில் பாலி சகுவின் மறு கலவை பாட்டு ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்த பாட்டை எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று தோன்றியது!! பிறகு தான் உறைத்தது ,இது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கேட்டோமே என்று.
நான் கேட்ட பாடல் "மேரி லௌங் கவாச்சா" என் தொடங்கும் பஞ்சாபி பாடல்.நுஸ்ரத் ஃபதே அலி கான் எனப்படும் புகழ் பெற்ற பாகிஸ்தானிய இசை கலைஞரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த பாடல் பாலி சகு மூலமாக மறு கலவை (Remix)செய்யப்பட்டு வெளிவந்தது. அதைத்தான் நம் சிற்பி "சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு' எனும் பாடலில் உபயோகப்படுத்தி இருக்கிறார்!! அடக்கடவுளே என்று சொல்வதை தவிர எனக்கு வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை!! நீங்களே கொஞ்சம் கேட்டு பாருங்களேன்!! :-)

உள்ளத்தை அள்ளித்தா - சிட்டு சிட்டு குருவிக்கு





மேரி லௌங் கவாச்சா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு






3.) படத்துல வர அப்பா கதாபாத்திரம் ,தன் மகனுக்கு கர்நாடக சங்கீதம் நன்றாக தெரியும் என்றும் அதனால் வீட்டிலேயே ஒரு கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்று பேச்சு வர அப்பொழுது "மாமா நீ மாமா" என்று ஒரு பாட்டு வரும். பாட்டை கேட்டவுடன் கர்நாடக சங்கீதம் என்று சொல்லிவிட்டு வட இந்திய இசை மெட்டு படி பாட்டு அமைந்திருக்கிறதே ந்ன்று நான் அப்பொழுதே நினைத்ததுண்டு. பின்பு தான் தெரிந்தது இதுவும் நுஸ்ரத் ஃபதே அலி கான பாலி சாகு கூட்டணியில் வந்த ஒரு புகழ்பெற்ற பாட்டின் ஈயடிச்சான் காபி என்று. ச ரி க ம என்று எது வந்தாலும் மக்கள் கர்நாடக சங்கீதம் தான் என்று நம்பி விடுவார்கள் என்று முடிவே செய்துவிட்டார்கள் போலும். :-)


உள்ளத்தை அள்ளித்தா - மாமா நீ மாமா






கின்னா சோனா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு





பி.கு:இதே பாட்டை நதீம் ஷ்ரவன் கூட்டணி "ராஜா ஹிந்துஸ்தானி" படத்தில் "கித்னா ப்யாரா துஜே" எனும் பாட்டிற்காக காபி அடித்திருக்கிறார்கள்.

4.)படத்தில் வரும் இன்னொரு ஜாலியான பாடல் "அடி அனார்கலி" என தொடங்கும் பாடல்.படத்தில் ரெக்கே இசை பாணியின் சாயல் பட்டவர்தனமாக தெரியும்.இந்த பாடலை "Mungo Jerry" எனும் இசைக்குழுவின் "In the summertime" என்ற பாடலில் இருந்து சுட்டிருக்கிறார்கள். இந்த பாடல் ஷாகி எனும் புகழ்பெற்ற ரெக்கே பாடகரால் 1995-இல் முறுமுறை வெளியிடப்பட்டிருந்தது். இதனால் இந்த பாட்டு மிக புகழ் பெற்றது.பாடலை ஒரு முறை கேட்டாலே இது காபி என்று புரிந்துவிடும்.

உள்ளத்தை அள்ளித்தா - அடி அனார்கலி





Mungo Jerry - In the summertime






இன்னொரு பி.கு: இதே பாடலை Tarazu எனும் படத்தில் "ஹசீனா கோரி கோரி" எனும் படலின் மூலம் இசை அமைப்பாளர் ராகேஷ் ரோஷன் அட்டை காபி அடித்திருப்பார் (நம்ம கூட போட்டி போடலைனா,இந்த பசங்களுக்கு தூக்கமே வராது போல) :-)


5.) படத்தில் மிக பிரபலமான பாட்டு "I love you,love you,love you,love you சொன்னாலே" (அடங்கொக்கா மக்கா,எவ்ளோ love you டா சாமி,நமக்கெல்லாம் ஒரு தடவையே யாரும் சொல்ல மாட்றாங்க!! :-P)
சென்னையில் அப்பொழுது புதிதாக வந்திருந்த MGM பொழுதுபோக்கு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்ட காட்சிகள் பாட்டையும் அந்த பூங்காவையும் செமத்தியாக பிரபலப்படுத்தியது.இனிமையான பாடல் தான் ஆனால் இந்த பாடல் ஒரு மத்திய கிழக்கு (திரும்பவும்) பாடலில் இருந்து அச்சு அசல் காபி (முதலில் வரும் ஆலாபனையில் இருந்து)
நீங்களே கேட்டு பாருங்க!! :-)

உள்ளத்தை அள்ளித்தா - I love you சொன்னாலே






ஹிஷம் அப்பாஸ் - வன்ன வன்ன வன்ன






காபியோ டீயோ படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது,இதனால் படமும் சுப்பர் ஹிட். இதனால் சிற்பிக்கும் நிறைய படங்கள் ஒப்பந்தம் ஆனது. லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்த "சுந்தர புருஷன்" எனும் படத்தின் மூலம் சிறிது பேசப்பட்டார்.(அதில் எந்த அளவுக்கு சொந்த சரக்கு இருந்தது என்று தெரியவில்லை).பின்பு காணாமல் போனார்.
அடுத்த பதிவில் இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்.
வரட்டா?? ;-)

நன்றி : http://www.itwofs.com/

Tuesday, May 08, 2007

சினிமா காரம் "காப்பி" - பாகம் 2

அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே (டேய்!!! அடங்குடா!! )
சரி சரி!!!

அன்பார்ந்த வலையுலக நண்பர்களே (ஹ்ம்ம் !! அது!!)
போன பகுதியை பார்த்து,படித்து,பின்னூட்டங்கள் இட்ட அனைத்து அன்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
போன பகுதிக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த பின்பு உங்களிடம் இந்த தலைப்பின் மேல் உள்ள ஆர்வமும்,அறிவும் கண்டுகொண்டேன். பல பேர் தனக்கு தெரிந்த இதர காபிகளையும், இன்ஸ்பிரேஷன் மற்றும் காபியில் உள்ள வேறுபாடு பற்றி தனக்கு தெரிந்த தெளிவான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பெயர் என்னமோ காப்பின்னு வெச்சாலும் கூட போன தடவை பார்த்த உதாரணங்கள் எல்லாம் இன்ஸ்பிரேஷன் வகையை சார்ந்ததே தவிர,அவற்றை முழுமையான காபி என்று சொல்ல முடியாது. ஆனால் அது போன்ற ஈயடிச்சான் காபி வகையை சேர்ந்த சில பாடல்களை இந்த பகுதியில் காணலாம்.

S.A.ராஜ்குமார் :
ஆர்ப்பாட்டமே இல்லாமல் தமிழ் திரையுலகில் அமைதியாய் நுழைந்தவர் S.A.ராஜ்குமார். எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருக்கிறது,படத்தில் ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை என விமர்சனங்கள் இருந்தாலும் அமைதியான,ஆரவாரம் இல்லாத மெல்லிய பாடல்களை சத்தமில்லாமல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.(இந்த பதிவில் அவரின் ஒரு பாடலின் சுட்டியை தருவதற்கு பதிலாக,அதே படத்தின் இன்னொரு பாடலின் சுட்டியை முதலில் போட்டுவிட்டேன்!! அந்த அளவுக்கு அவரின் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கும்!! :-))

காபி அடிப்பதில் ஜாம்பவான்கள் சிலரின் (ஒருவரின்?!) மேலேயே மக்களின் கவனம் இருந்ததால்,இவரின் இசையில் காபிகள் உள்ளனவா என்பதை பற்றி எல்லாம் மக்கள் அவ்வளவாக கவனிக்கவில்லை. ஆனால் இவரின் மேல் உள்ள என் மதிப்பை புரட்டி போட்ட படம் "வானத்தை போலே". இந்த படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றன ஆனால் என் கவனத்தை பெற்ற ஒரு பாடல் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" எனும் பாடல்.

ஏன் என்று கேட்கிறீர்களா ?? ஏன் என்றால்,இது "Daag - the fire" எனப்படும் இந்தி திரைப்படத்தில் வரும் இந்த பாடலின் அச்சு அசல் காபி. இதை கேட்ட பின் அட பாவிகளா தேவா மட்டும் தான் இப்படி என்றால் அவருக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டாரே என்று நினைத்துக்கொண்டேன்.
இது கூட பரவாயில்லை ஆனால் "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இவர் பாகிஸ்தான் இசைக்குழுவின் ஒரு பாடலையும் சுட்ட கதை உண்டு.
என்னது??? பாகிஸ்தானா??? ஏன் காபி அடிக்க வேறு பாடலா கிடைக்கவில்லையா?? என்று தோன்றுகிறதா?

பாகிஸ்தானில் "ஜுனூன்" என்று ஒரு இசைக்குழு உண்டு. இவங்களுக்கும் நம்ம ஊருல மெகா சீரியல்களின் அட்டகாசங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்கன்னா,நீங்க பாட்டுக்கு எதாவது வெளி நாட்டு சதி இருக்குமோன்னு யோசிக்க ஆரம்பிச்சுராதீங்க!! :-)
அவர்களின் பாடல்கள் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் பெறும் புகழ் பெற்றவை. இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை வளர்க்கும் முயற்சிகள் நடந்த சமயத்தில் அவர்கள் இந்தியா வந்து மேடை கச்சேரிகள் செய்த கதைகள் எல்லாம் உண்டு.

அந்த குழுவின் "சய்யோனி" எனும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது!! சூஃபி இசை ரகத்தில் மேற்கத்திய இசையை அழகாக கலந்து ஒரு விதமான சோகத்தின் ஊடேயும் விறுவிறுப்பான மன நிலையை அளிக்கவல்ல அருமையான பாடல் அது. இசைக்கு மயங்காதோர் எவரும் உண்டோ என்பது போல் பாகிஸ்தானிய இசை திறமை பற்றி எனக்கு அறிமுகப்படுத்திய அழகான பாடல் அது. அருமையாக படப்பிடிப்பும் செய்யப்பட்டிருந்ததால் அந்த பாட்டு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. (நடுவில் வரும் கிதார் அலாபனை அற்புதம்!! :-))

சிறிதே தமிழ் திரை இசை பாணியில் மாற்றப்பட்டது போல் தெரிந்தாலும் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் வரும் "மேகமாய் வந்து போகிறேன்" எனும் பாடலில் ஈயடிச்சான் காபி அடித்திருப்பார் S.A.ராஜ்குமார்
நீங்களே கேட்டு பாருங்களேன்!! :-)

S.A.ராஜ்குமார் "மேகமாய் வந்து போகிறேன்" : படம் "துள்ளாத மனமும் துள்ளும்"




Sayonee - Junoon




இதில் இன்னொரு தமாஷ் என்னவென்றால் இதே பாட்டை நம்ம தேவா சார் தனக்கே உரிய பாணியில் இன்னொரு முறை காபி அடித்திருப்பார்.
"கண்ணெதிரே தோன்றினாள்" எனும் திரைபடத்தில் வரும் "சலோமியா"
எனும் பாடலில் தான் இந்த கூத்து நடந்திருக்கும்!! :-)
தேவாவா கொக்கா?? :P


ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!
இப்பவே கண்ணை கட்டுதே,இதுக்கு மேல எழுதினா இந்த பதிவு தாங்காது. அடுத்து தேவாவை பற்றி வேற எழுத போறேன். அதனால அதை தனி பதிவாத்தான் ஆரம்பிச்சாகனும்!!!
அடுத்த காபி பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து நன்றியுடன் விடை பெறுவது,உங்கள் அன்பு சீவீஆர்!!

வரட்டா?? :-)

Sunday, May 06, 2007

சினிமா காரம் "காப்பி" - பாகம் 1

என் இனிய தமிழ் மக்களே!!
அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக்கிட்டு (இல்ல பிடுங்கறா மாதிரி நடிச்சிக்கிட்டு) எல்லோரும் ரொம்ப சோர்வா இருப்பீங்க. இந்த சோர்வுக்கு இளைப்பார ஒரு காபி குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?? உங்களுக்கு எல்லாம் காபி தரலாம்னு எனக்கும் ஆசைதான் ,ஆனா தொழில்நுட்பம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை,நான் என்ன பண்றது :-(
சரி காபி தான் கொடுக்க மாட்டேங்குற ,காபி ராகம் பத்திய பதிவா இது அப்படின்னு கேக்கறீங்களா??
சிந்து பைரவி பட பாட்டுல வரா மாதிரி நாமலும் "என்னமோ ராகம்,என்னென்னமோ தாளம்,தலைய ஆட்டும் புரியாத கூட்டம்" தான்,அதனால நீங்க பயப்படாதீங்க.

நம்ம தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளர்கள் செய்யும் காபிகள் பத்தி தான் இந்த பதிவு.
காபி அடிக்கரதுலையே பலவிதங்கள் இருக்குங்க!! நாம அன்றாடம் பல பேர்களை பார்க்கிறோம்,பல விஷயங்களை கேட்கிறோம்,படிக்கிறோம். இவற்றின் பாதிப்பு நாம் செய்யும் பல செயல்களில் நம்மையும் அறியாமல் புகுந்து விடுவது தவிர்க்கமுடியாதது. அதுவும் பெரும் புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் என்றால் நிலைமை ரொம்ப கஷ்டம். தங்கள் துறையில் அவ்வப்போது வெளிவரும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக பல வகை இசை தொகுப்புகளை கேட்பது எந்த ஒரு இசை அமைப்பாளரும் செய்யும் விஷயம்.

பல படங்களில் ஒப்பந்தமாகி தயாரிப்பாளரும்,இயக்குனரும் எனக்கு இந்த மாதிரி இசை வேண்டும்,அந்த மாதிரி மெட்டு வேண்டும் என்று நெருக்குதல் தரும் போது முன் எப்போவோ கேட்ட பாதிப்பில் இசை அமைப்பது புரிந்துக்கொள்ள கூடியது தான். ஆங்கிலத்தில் இந்த் விதமான இசை அமைப்புகளை "Inspired" என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இசைகளை அமைப்பதிலும் திறமையும் உழைப்பும் தேவை என்பதால் இதை கூட மன்னிச்சு விட்டு விடலாம். ஆனால் சில பேர் ஈயடிச்சான் காபி அடிப்பார்கள் பாருங்கள். அதை தான் பொருத்துக்கொள்ளவே முடியாது.அதுவும் சில பேர் அப்படி காபியும் அடித்து விட்டு அதை தான் மிக கஷ்டப்பட்டு உருவாக்கியது போல் பேசும் போது எரிச்சலாக வரும். இன்னும் சில பேர் இருப்பதையும் கேவலப்படுத்துவதை போல் சொதப்பிவிடுவார்கள் பாருங்கள்,அதையெல்லாம் என்னவென்று சொல்ல??

இந்த பதிவில் நமக்கு தெரிந்த சில காபிகள் பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.


எம்.எஸ்,விஸ்வனாதன்:

தமிழ் திரையுலகில் மெல்லிசை என்றால் என்ன என்பதை எல்லோருக்கும் அறிமுகபடுத்தியவர்களே மெல்லிசை மன்னர்களான விஸ்வனாதன் ராமமூர்த்தி தான். அதற்கு முன் இருந்த திரை இசை பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தையே சார்ந்திருந்தது. இப்பொழுது பெரிதும் பேசப்படும் கலந்திசை (fusion music) இன் முன்னோடிகள் அவர்கள்தான். மேற்கத்திய இசை பாணிகளை லகுவாக இந்திய இசையுடன் கலந்து இனிமையான பாடல்களை நமது செவிகளுக்கு விருந்தாக படைத்தவர்கள். அவர்கள் படைத்த பல பாடல்கள் காலத்தை கடந்து நம் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.

எம்.எஸ்.விஸ்வனாதன் இசை அமைப்பில் எனக்கு பல பாடல்கள் பிடித்திருந்தாலும் எனக்கு பெரிதும் பிடித்த ஒரு பாடல் "புதிய பறவை" படத்தில் வரும் "பார்த்த நியாபகம் இல்லையோ" என்கிற பாடல். அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நான் அப்படியே உருகி விடுவேன். ஒரு விதமான "mystic" உணர்வை வெகு அழகாக வெளி கொணர்ந்திருப்பார் இசை அமைப்பாளர். பாடலை பாடிய விதமும்,அதை படம் பிடித்திருக்கும் விதமும் வெகு அற்புதமாக அமைந்திருக்கும்.
அனால் இந்த பாடலில் "SwayWithMe-DeanMartin" என்ற மேற்கத்திய பாட்டு ஒன்றின் சாயல் இருப்பதை சமீபத்தில் அறிந்தேன். "inspired" என்ற சொல்லுக்கு மிக அற்புதமான சான்றாக இந்த பாடலை கொள்ளலாம். கர்நாடக இசையோடு மேற்கத்திய இசையை கலந்து பரிசோதனை நடந்து வந்த காலத்தில் இப்படிப்பட்ட சாயல்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். மக்களுக்கு புதிய பரிமாணங்களை அளிக்க வேண்டும் என்ற இசை அமைப்பாளரின் எண்ணத்தை பாராட்டத்தோன்றுகிறதே தவிர,இதை குறை கூற தோன்ற வில்லை.
இது ஒன்றும் அச்சு அசலாக காபி அடிக்கப்பட்ட பாட்டு இல்லை என்றாலும் இசை பாதிப்புகள் என்பது எல்லா நேரங்களிலும் நடந்திருக்கிறது,இது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல என்பதை விளக்கவே இந்த பாடலை இந்த பதிவில் சேர்த்திருக்கிறேன். ஆனால் இந்த பாடலை முதலில் கேட்டால் இது காபி என்று கூட சொல்ல முடியாது,உன்னிப்பாக கேட்டால் தான் இதன் பாதிப்பை புரிந்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இதை மிக நேர்த்தியாக மற்றி இருக்கிறார் இசை அமைப்பாளர்.குறிப்பாக 1:40 நிமிடத்தில் வரும் இசை சிறிது காட்டிகொடுக்கலாம். :-)

எம்.எஸ்.விசுவனாதன் "பார்த்த நியாபம் இல்லையோ" : படம் "புதிய பறவை"

PaarthaNyabagam-Pu...




SwayWithMe-DeanMartin

SwayWithMe-DeanMar...




இசைஞானி இளையராஜா:
மெல்லிசை என்னவென்று சொன்னவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றால் தமிழ் திரை இசையில் மெல்லிசையை அரியாசனம் போட்டு நீங்காத இடம் பிடிக்கச்செய்தவர் இசைஞானி இளையராஜா என்று சொல்லலாம். இவரை பற்றி சொல்ல கொஞ்ச நஞ்சம் கிடையாது,தமிழ் திரை இசை இப்போது இருக்கும் நிலைக்கு ஒரு "Godfather" ஆக திகழ்பவர் இளையராஜா அவர்கள்.இவரின் இசையிலும் "inspired" ரகங்களே உண்டே தவிர ஈயடிச்சான் காபி இருக்காது. உன்னிப்பாக கேட்டாலே ஒழிய இவரின் பாடல்களிலும் பாதிப்புகளை உணர முடியாது.
"ஒரு கைதியின் டைரி" படத்தில் "ABC நீ வாசி" என்று ஒரு பாடல். மிக அழகான மெல்லிசை. காதலர்களின் குறும்பும்,ஊடலும்,பொய்க்கோப பூக்களும் அழகாக கொப்பளிக்கும் இந்த பாடலில்.
இந்த பாடல் ஒரு பிரென்சு சிம்பனி இசையின் பாதிப்பில் அமைந்ததாக ஒரு கருத்து உண்டு. பாடலை கேட்டு நீங்களே சொல்லுங்களேன்!! :-)

இசைஞானி இளையராஜா "ABC நீ வாசி" : படம் "ஒரு கைதியின் டைரி"

ABC-OruKaidhiyinDi...



L'Arlésienne Suite No.1-Carillon

Carillon-GeorgesBi...


பி கு : ஒரு சுவாரஸ்யமான விஷயம் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் வரும் "என் வாழ்விலே" பாடலின் நடுவில் வரும் இசையும் "மூன்றாம் பிறை" படத்தில் "பூங்காற்று புதிரானது" பாடலின் நடுவில் வரும் இசையும் (ஸ்ரீதேவி ரயில் தடத்தில் மாட்டிகொள்லும் காட்சியில் வரும் இசை) ஒரே மாதிரி இருக்கும். இப்படி அச்சு அசலாக ஏன் இளையராஜா இசை அமைத்தார் என்று நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு.


ஏ.ஆர்.ரகுமான்:

தமிழ் திரை இசையை நாடு முழுக்க கேட்க வைத்த இசை அமைப்பாளர்.தமிழ் திரை பாடல்களை உலகம் முழுதும் கவனிக்க வைத்தவர் என்றால் அது மிகையாகாது. இந்திய இசையில் மேற்கத்திய இசையை பெரிதும் புகுத்தி புரட்சி செயதவர்.நிறைய புதுப்புது விஷயங்களாய் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற துடிப்பினால் இவரிடமும் வெளிநாட்டு இசையின் பாதிப்புகளை பார்க்கலாம். இவரின் பாடல்கள் சிலவற்றில் தாளங்கள் (beats) முழுவதுமாக வெளிநாட்டு இசையிலிருந்து சுட்டவையாக இருக்க பார்க்கிறோம்.உதாரணத்திற்கு "அக்கடான்னு நாங்க உடை போட்டா",படம்
: இந்தியன் (Love of common people), "தென்மேற்கு பருவ காற்று",படம் : கருத்தம்மா ( Om we rembwe ike0). ஆனால் பாடலின் மெட்டுக்கள் எனக்கு தெரிந்த வரை சொந்த சரக்காகத்தான் இருக்கும்.

இந்தியன் படம் மிக அருமையான பாடல்கள் பலவற்றை கொண்ட படம். அதில் 'டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா??" எனறொரு பாடல். ஆஸ்திரேலியாவில் மிக அழகாக படமாக்கப்பட்ட பாடல்,இந்த பாடலில் "Ace of the base:All that she wants" என்ற ஒரு ஆங்கில பாட்டின் தாக்கம் உள்ளது என்று என் நண்பன் சொன்ன போது நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பொழுதெல்லாம் எனக்கு ரகுமான் இசை என்றால் ஒரு பைத்தியம்,அதனால் பிடிவாதமாக நம்ப மறுத்தேன். பிறகு அந்த பாடலை கேட்ட பின் தான் புரிந்தது.

நீங்களும் கேட்டு பாருங்களேன்,பாடல் நன்றாகத்தான் இருக்கும். பாடலை முழுவதுமாக கேட்க பொறுமை இல்லை என்றால் ஆங்கில பாட்டில் குறிப்பாக 2:14 நிமிடத்தில் இருந்து கேட்டு பாருங்கள்!! :-)

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் "டெலிஃபோன் மணி போல்" : படம் :"இந்தியன்"

Ace of the base : All that she wants

---காபிகள் தொடரும்

நன்றி : http://www.itwofs.com/